தற்போதைய அரசாங்கம் பொய்களை கூறி ஆட்சியை பிடித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
எரிபொருள் கையிருப்பில் உள்ளதென கூறிய அரசாங்கம் தற்போது அதிக விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்தகால அரசாங்கங்கள் ட்ரில்லியன் கணக்கில் பணம் வைத்திருப்பதாக கூறினர். ஆனால் இப்போது அதை பற்றி பேசுவதே இல்லை.
விவசாயத்தை பொறுத்தவரை உள்ளூர் உற்பத்தியை விட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதிலே அரசாங்கம் உறுதியாகவுள்ளது என தெரிவித்தார்.
