திறன் மேம்பாட்டு அமைச்சகம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த தொழிற் சந்தை இன்றைய தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
குறித்த தொழிற் சந்தையில் கல்விசாரா தொழில் வழங்குனர், தனியார் தொழில் வழங்குனர் மற்றும் மனிதவள வேலை வாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், தொழில் பெறுநர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
