Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்தது ஈரான்

மார்ச் 25, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்ட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக முன்வைக்கப்பட்ட அமெரிக்காவின் முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளதாக அந்நாட்டின் உயர்மட்ட அரசியல்-பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

போர் எப்போது முடிவுக்கு வர வேண்டும் என்பதை ஈரானே தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் போர் முடிவுக்கு வருவதற்கான நேரத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானிக்க ஈரான் அனுமதிக்காது அவர் கூறியுள்ளார்.

மேலும் “ஈரான் எப்போது விரும்புகிறதோ மற்றும் அதன் நிபந்தனைகள் எப்போது நிறைவேற்றப்படுகிறதோ, அப்போதுதான் போர் முடிவுக்கு வரும்” என அந்த அதிகாரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எதிரிக்கு பலத்த அடிகளைத் தொடர்ந்து கொடுத்து, ஈரானின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தற்காப்பு நடவடிக்கைகள் தொடரும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வோஷிங்டன் பல்வேறு இராஜதந்திர வழிகளில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தாலும், அவை யதார்த்தத்திற்குப் புறம்பானவை என ஈரான் கருதுகின்றது.

2025 ஆம் ஆண்டு வசந்த காலம் மற்றும் குளிர்காலத்தில் நடைபெற்ற முந்தைய பேச்சுவார்த்தைகளை ஈரானிய அதிகாரி “ஏமாற்று வேலை” என்று விமர்சித்துள்ளார்.

அந்த சமயங்களில் அமெரிக்காவிற்கு உண்மையான பேச்சுவார்த்தையில் ஈடுபாடு இருக்கவில்லை என்றும், மாறாக ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரான் போரை நிறுத்த வேண்டுமானால் சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்

எதிரி தரப்பிலிருந்து முன்னெடுக்கப்படும் அனைத்து வகையான தாக்குதல்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

இஸ்லாமியக் குடியரசு மீது மீண்டும் ஒரு போர் திணிக்கப்படாது என்பதை உறுதிப்படுத்த முறையான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை முறையாக வழங்கப்பட வேண்டும்.

பிராந்தியத்தில் உள்ள அனைத்து எதிர்ப்பு குழுக்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் போர்கள் அனைத்து முனைகளிலும் நிறுத்தப்பட வேண்டும்.

ஹோர்முஸ் நீரிணையின் மீது ஈரானுக்குள்ள இறையாண்மை மற்றும் அதிகாரத்தை சர்வதேச அளவில் அங்கீகரிக்க வேண்டும்.

இந்த சட்டவிரோதப் போர் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி, அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே, ஈரானிய புரட்சியின் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள்கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கியது.

இதற்குப் பதிலடியாக, ஈரானியப் படைகள் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ இலக்குகள் மீது இதுவரை சுமார் 80 கட்டத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஈரானின் அனைத்து நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் வரை எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறாது என அந்த அதிகாரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணையை கடந்தது சீனக் கப்பல்
அடுத்த செய்தி தொழில்நுட்ப உலகில் பேரதிர்ச்சி – முடங்கியது Sora AI

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளூராட்சி தேர்தல் – வேட்புமனுக்களை ஏற்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

ஏப்ரல் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க நடவடிக்கை!

ஜூன் 1, 2025
உலகம்முதன்மை செய்தி

மகா கும்பமேளாவில் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 66 கோடி, அடுத்த கும்பமேளா 2169 ம் ஆண்டு நடைபெறும்

பிப்ரவரி 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் மீட்பு

அக்டோபர் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?