மொன்றியல் நகரின் மையப்பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதல் குறித்த விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை நடைபெற்ற இந்த மோதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை சுமார் 2:15 மணியளவில், மொன்றியலின் பீல் வீதியில் (Peel Street) உள்ள ஒரு இரவு விடுதியில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
34 மற்றும் 48 வயதுடைய இரு நபர்களுக்கும், மற்றொரு மர்ம நபருக்கும் இடையே தொடங்கிய இந்தத் தகராறு, விடுதிக்கு வெளியே வீதி வரை நீடித்தது.
விடுதிக்கு வெளியே வந்ததும் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர், தான் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் மற்ற இருவரையும் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மொன்றியல் பொலிஸார் (SPVM), காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாக்குதல் நடத்திய நபர் பொலிஸார் வருவதற்குள் அங்கிருந்து தப்பியோடிவிட்டமை குறிப்பிடத்தக்கது.
