Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

டிஃபென்ஸ் தொழிற்சாலைக்கு இராணுவ ஒப்பந்தத்தை வழங்கிய மத்திய அரசு

மார்ச் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்ராறியோ – இங்கர்சோல் (Ingersoll) பகுதியில் அமைந்துள்ள டிஃபென்ஸ் (IMT Defence) தொழிற்சாலைக்கு பல மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ ஒப்பந்தத்தை மத்திய அரசு இன்று வழங்கியுள்ளது.

நாட்டின் ஆயுதத் தயாரிப்புத் திறனை அதிகரிப்பதற்கும், சர்வதேச பாதுகாப்புப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் இந்த முக்கிய முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது உக்ரைன் போர் மற்றும் சர்வதேச பதற்றங்கள் காரணமாக 155mm ரக பீரங்கி குண்டுகளுக்கான தேவை உலகளவில் அதிகரித்துள்ளது. இந்த புதிய நிதியுதவியின் மூலம், தொழிற்சாலையில் அதிநவீன ரோபோடிக்ஸ் மற்றும் நவீன இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளன.

இதன் மூலம் தற்போதைய உற்பத்தியை விட இரண்டு மடங்கு அதிகமான ஏவுகணைக் குண்டுகளுக்கான கூடுகளைத் (Shell Casings) தயாரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் ஒக்ஸ்போர்ட் கவுண்டி (Oxford County) பகுதியின் பொருளாதாரத்திற்கு பெரும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விரிவாக்கத் திட்டத்தினால் சுமார் 50 புதிய உயர்-திறன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஏற்கனவே அங்கு பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களின் வேலைவாய்ப்பு இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வட அமெரிக்காவிலேயே இத்தகைய கனரக ஆயுதக் கூடுகளைத் தயாரிக்கும் ஒரு சில தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நேட்டோ (NATO) நட்பு நாடுகளின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வரும் நிலையில், கனடா தனது சொந்த மண்ணிலேயே ஆயுதத் தயாரிப்பை ஊக்குவிக்கத் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் பிற நாடுகளை நம்பியிருக்க வேண்டிய அவசியம் குறைவதுடன், கனடிய இராணுவத்திற்குத் தேவையான தளவாடங்களை உள்நாட்டிலேயே தடையின்றிப் பெற்றுக்கொள்ள முடியும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.

முந்தைய செய்தி கனேடிய மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
அடுத்த செய்தி வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி: பெட்ரோல் வரிச் சலுகை ரத்து” – நிதியமைச்சர் எரிக் ஜிரார்ட்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

டொராண்டோ பெரும்பாகத்தில் வெள்ள அபாயம்…..

மார்ச் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

மிகப்பெரிய LNG உற்பத்தியாளராக மாறுவதற்கு கனடா இரண்டாவது வாய்ப்பைப் பெறுகிறது!

ஜூன் 29, 2025
கனடா

ஒன்டாரியோவில் ஆசிரியை ஒருவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

டிசம்பர் 1, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோவில் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் புதிய சட்ட முன்மொழிவு

ஜூலை 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?