வடக்கு ஒன்ராறியோவில் கடந்த மூன்று வாரங்களாக நீடித்து வரும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் தற்போது ஒரு நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் பேருந்துச் சேவைகள் வழமைக்குத் திரும்பாவிட்டால், பேருந்து நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக பிராந்திய கல்விப் போக்குவரத்து சங்கம் (Consortium) எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘அலுவெட் பஸ் லைன்ஸ்’ (Alouette Bus Lines) நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 80 ஓட்டுநர்கள், நியாயமான ஊதியம் கோரி கடந்த பிப்ரவரி 23 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது இவர்களுக்கு மணித்தியாலத்துக்கு 18.11 டொலர்கள் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.
இது இப்பகுதியின் வாழ்க்கைச் செலவுக்கு போதுமானதல்ல எனக் கூறி, ஓட்டுநர்கள் மணித்தியாலத்துக்கு 21.10 டொலர்கள் ஊதியம் வழங்கக் கோரி வருகின்றனர்.
‘அலுவெட் பஸ் லைன்ஸ்’ (Alouette Bus Lines) நிறுவனம் 20 டாலர்கள் வரை ஊதியம் தர முன்வந்தும், தொழிற்சங்கம் அதனை ஏற்க மறுத்துவிட்டது.
நோர்த் பே, மேற்கு நிப்பிசிங் மற்றும் பாரி சவுண்ட் ஆகிய பகுதிகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களின் தொடர் புகார்களை அடுத்து, இப்பகுதியின் நான்கு பள்ளி சபைகளை நிர்வகிக்கும் ‘நிப்பிசிங்-பாரி சவுண்ட் மாணவர் போக்குவரத்து சேவையானது, ‘அலுவெட் பஸ் லைன்ஸ்’ (Alouette Bus Lines) நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
