பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தீக்கோழிகளை அழிக்க உத்தரவிட்டதற்கு எதிராக, பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு பண்ணை தொடர்ந்த வழக்கு தோல்வியடைந்துள்ளது.
நீதிமன்றம், தீக்கோழிகளை அழிக்கும் அரசின் உத்தரவை உறுதி செய்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் எட்ஜ்வுட் நகரில் அமைந்துள்ள யுனிவர்சல் ஆஸ்ட்ரிச் (Universal Ostrich) என்ற தீக்கோழி பண்ணையில், கடந்த டிசம்பர் மாதம் இரண்டு தீக்கோழிகள் இறந்தன.
அவை பறவைக் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்டமை, ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, கனடிய உணவு ஆய்வு முகவரகம் (CFIA), பண்ணையில் உள்ள சுமார் 450 தீக்கோழிகளையும் அழிக்குமாறு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பண்ணை நிர்வாகத்தினர் தொடர்ந்த வழக்கினை நீதிமன்றம் நிராகரித்தது
பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக, “முழுமையாக அழித்தல்” (stamping out) என்ற கொள்கையை கடைப்பிடிப்பது அவசியமானது என நீதிமன்றம் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
