கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைதான இருவரும் குற்றத்திற்கு துணை நின்றவர்கள் என்ற அடிப்படையில் கைதாகியுள்ளனர்.
குறித்த இருவரும் துப்பாக்கி சூட்டிற்கு பிறகு சந்தேகநபர் ஒருவரை மொனராகலைக்கு அழைத்து சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது.
இதன்படி 39 மற்றும் 53 வயதுடைய இப்பாகமுவ மற்றும் மாகொல பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு தொடர்பில் இதுவரை 8 சந்தேகநபர்கள் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் ஹோமாகம வலய குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
