மொண்ட்ரியல் மற்றும் ஷெர்புரூக் பகுதிகளில் முதியவர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வந்த 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களை மொண்ட்ரியல் காவல்துறையினர் (SPVM) கைது செய்துள்ளனர்.
மொண்ட்ரியலின் வடக்குப்பகுதி மற்றும் ஷெர்புரூக் நகரங்களில் வசிக்கும் முதியவர்களிடம் இவர்கள் திட்டமிட்டுத் திருட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முதலில் முதியவர்கள் வசிக்கும் வீடுகளைக் கண்டறிந்து, அங்கு புகுந்து அவர்களின் வங்கிக் அட்டைகளைத் (Bank Cards) திருடுவதை இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட முதியவர்களுக்குத் தொலைபேசியில் அழைத்து, ‘காவல்துறை அதிகாரிகள்’ அல்லது ‘வங்கி ஊழியர்கள்’ என்று பொய் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டு, அட்டைக்குரிய இரகசிய எண்களையும் கேட்டுப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தற்போது, இந்த இருவரும் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் காவல்துறையால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
