ஹம்பாந்தோட்டை பகுதியில் அமைந்துள்ள லுனுகம்வெஹெர நீர்த்தேகத்தில் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி கடந்த 28 ஆம் திகதி லுனுகம்வெஹெர நீர்த்தேகத்திற்கு மீன் பிடிப்பதற்காக இரண்டு இளைஞர்கள் படகில் சென்றிருந்த நிலையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இருவரும் காணாமல் போன நிலையில் நேற்றையதினம் ஒருவரின் சடலம் நீர்த்தேக்கத்தில் மிதந்து வந்ததை அவதானித்துள்ளனர்.
இந்நிலையில் திஸ்ஸமஹாராமாவிலுள்ள தெபரவெவ வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதுடன், நீரில் மூழ்கி உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் மற்றுமொருவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
