சுன்னாகம் மருதனார்மடம் பகுதியில் தீ விபத்தொன்று பதிவாகியுள்ளது.
அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிளுக்கு யாராவது தீ வைத்தார்களா அல்லது தானாக தீ பற்றி எரிந்ததா என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
மேலும் இந்த தீ விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
