நாட்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் நுவரெலியா மாவட்டத்தை நோக்கி அதிக சுற்றுலா பயணிகள் வருவதாக நுவரெலியாவில் உள்ள சேவை வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி நுவரெலியாவிற்கு வருகை தரவுள்ள சுற்றுலா பயணிகள் அங்குள்ள அனைத்து ஹோட்டல்களிலும் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக சுற்றுலா பயணிகள் கிரிகரி வாவி வளாகம் மற்றும் நுவரெலியாவின் பிரதான சுற்றுலா தளங்களை பார்வையிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
