ஈரானில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி ஹமூத் அகமதிநெஜாத் மற்றும் ஈரானின் உச்ச தலைவர் உயிரிழந்தமை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு மறைந்த ஈரானிய தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்து சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் , உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் என்பவற்றுக்கு பெரும் உதவிகளை செய்துள்ளார்.
இவர்களின் ஆட்சி காலத்தில் இலங்கையுடன் சிறந்த உறவை பேணினார்கள். இதை நாங்கள் எப்போதும் மறக்கமாட்டோம்.
ஈரானில் உயிரிழந்த முக்கிய தலைவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கின்றோம்.
ஈரானின் தற்போதைய சூழ்நிலையில் நாங்கள் அவர்கள் பக்கமே இருப்போம். தற்போதைய சூழ்நிலையில் போரை நடத்துவதை காட்டிலும் சுமூகமான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .
