அண்மையில் இடம்பெற்ற அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற ரெட்டை கொலை தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த கொலை இடம்பெற்று மூன்று நாட்களில் பிரதான துப்பாக்கிதாரி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் மூன்று பேர் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இந்த கொலையுடன் தொடர்புடைய ஏனைய நபர்களை கைது செய்வதற்கு 12 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
