இலங்கை கடற்படையினரால் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது 685 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கற்பிட்டி முகத்துவாரம் கடற்பகுதியில் மேட்கொண்ட சுற்றி வளைப்பிலே 685 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகளும், டிங்கி படகொன்றையும் கைப்பற்றினர்.
குறித்த விடயம் தொடர்பில் கற்பிட்டி பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட அத்தனை பொருட்களையும், கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் கடற்படை ஒப்படைத்துள்ளது.
