ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை செயலகத்தில் இன்றையதினம் ஊடக சந்திப்பொன்று நிகழ்ந்த வேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி நாமல் ராஜபக்ஷ தொடர்பில் பேசியிருந்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் ,
தற்போதைய அரசாங்கம் நாமல் ராஜபக்ஷவை சிறையில் அடைப்பதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர்.
மக்களின் ஆணை தங்கள் பக்கம் திரும்பும் போது, அரசாங்கம் நாமலை சிறையில் அடைக்கும்.
அரசாங்கம் சிறையில் அடைத்தாலும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஷ சிறையிலிருந்தே வெற்றி பெறுவார், இது வரலாற்றில் பதியக் கூடிய ஒரு விடயமாக மாறும் எனக் கூறியுள்ளார்.

