யாழ்ப்பாணம் சிறைச்சாலை நிர்வாகத்தினரால், தைப்பூச தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண முனீஸ்வரர் ஆலயத்தில் அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.
சிறைச்சாலை அத்தியட்சகர் சீனிவாசன் இந்திரகுமார் தலைமையில் சிறைச்சாலை அதிகாரிகள் கலந்துகொண்டு தைப்பூச தினமான இன்றைய தினம் முனீஸ்வரன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் அன்னதானமும் வழங்கி வைத்தனர்,
இந்த விசேட பூஜை நிகழ்வில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சிறைகைதிகள் என பலர் கலந்து கொண்டு இருந்தனர். வருடா வருடம் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரிகளினால், முனீஸ்வரன் ஆலயத்தில் தைப்பூச தினத்தில் விசேட அன்னதானமும் பூசை வழிபாடுகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
