Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

புதிய கல்வி சீரமைப்பின் ஊடாக புதிய மாற்றங்களை உருவாக்க இருக்கின்றோம் – பா.உறுப்பினர் கந்தசாமி பிரபு

பிப்ரவரி 1, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

இந்த நாட்டில் புதிய ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டதைப் போன்று புதிய கல்வி சீரமைப்பு ஊடாக புதிய மாற்றங்களை நாம் உருவாக்க இருக்கின்றோம். இந்த புதிய கல்வி சீரமைப்பு தொடர்பாக எதிர்ப்பினை தெரிவிக்கின்றவர்களுக்கு சரியான புரிதல் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்

மட்டக்களப்பு உல்லாச விடுதி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை யுயசழ 360 நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் தேவநாயகம் நிறோசன் தலைமையில் இன்று (01) இடம்பெற்ற Aaro 360 டிஜிட்டல் இலத்திரனியல் செயலியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அதனை உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு முன்னர் பல ஊழல் மோசடிகள் நிறைந்த ஒரு நாடாக காணப்பட்டது. இப்போது நாங்கள் இந்த ஊழல் மோசடிகள், இலஞ்ச ஊழல்களை வெகுவாக குறைத்து வருகிறோம். ஊழல் மோசடி குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டிருக்கிறது.

வெகு விரைவில் இந்த நாட்டில் ஊழல் மோசடிகளை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கையினை செய்து வருகிறோம்.

டிஜிட்டல் மயமாக்கல் தொழில்நுட்பம் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு கொள்கையாக இருக்கின்றது, எமது அரசாங்கம் டிஜிட்டல் பொருளாதாரம் எனும் ஒரு அமைச்சினை உருவாக்கி அதனூடாக பல நல்ல விடையங்களை முன்னெடுத்து வருகின்றது, அதில் விசேடமாக Gopay என்ற அப்பினையும் உருவாக்கியுள்ளோம்.

தற்போது வீட்டில் இருந்தவாறே அரச துறைக்கான கட்டணங்களைச் செலுத்தி தமக்கான சேவையினை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கான தொழில்நுட்ப வசதியை எமது அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

அது மட்டு மல்லாது உங்கள் பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழினை கூட வீட்டில் இருந்தவாறு பெற்றுக்கொள்வதற்கான தொழில்நுட்ப வசதியை நாம் தற்போது ஏற்படுத்தியுள்ளோம்.

அதனையும் தாண்டி தற்போது போக்குவரத்து பொலிசாரின் தண்டப்பணங்களை கட்டுவதற்காகவும் டிஜிட்டல் மயமாக்கல் உருவாக்கியுள்ளோம்.

எம்மை அண்மித்த இந்தியா போன்ற நாடுகளில் புதிய தொழில் நுட்பங்களின் ஊடாக தங்களது சேவைகளை விஸ்தீரணம் செய்திருக்கின்றார்கள். பொருளாதார ரீதியாக அந்த நாடுகள் முன்னேற்றம் காண்பதற்கு அந்த தொழில்நுட்பமும் முக்கிய வகிபாகம் கொண்டுள்ளது.

முந்தைய செய்தி யாழ். சிறைச்சாலை நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அன்னதானம்
அடுத்த செய்தி அமெரிக்காவில் நடக்கும் விடயங்களுக்கு தான் தீர்ப்பு வழங்க விரும்பவில்லை – கேரி ஆனந்த சங்கரி கருத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பேக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல் காலம் நீடிப்பு!

செப்டம்பர் 25, 2025
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திக்க சென்ற முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா!

செப்டம்பர் 18, 2025
இலங்கை

முல்லைதீவில் இளைஞன் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெறும் – ஜெகதீஸ்வரன் எம்.பி

ஆகஸ்ட் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்

அக்டோபர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?