கருங்கல்லு சல்லிக்குள் தேக்கு மர குற்றிகளை மறைத்து ஏற்றிச் சென்ற டிப்பர் சாரதி இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி குறித்த மரக் குற்றிகளை ஏற்றி சென்றபோது சாவகச்சேரி பகுதியில் வைத்து குறித்த சம்பவம்
இடம் பெற்றுஉள்ளது
15 இலட்சம் ரூபா பெறுமதியான தேக்கு மர குற்றிகளை டிப்பரின் கீழே மறைத்து விட்டு வந்தபோது, சாவகச்சேரி பொலிஸ் பொலிஸ் பரிசோதகரான மயூரன் மற்றும் கொஸ்தாபல் நிருபன் ஆகியோர் குறித்த டிப்பரை சோதனையிட்டனர். இதன்போது அதில் மரக்குற்றிகள் ஏற்றி வந்தமை தெரிய வந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.