Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வேலையில்லா பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கவும் – அந்தனிசில் ராஜ்குமார்

ஜனவரி 30, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வரும் பட்டதாரிகள் நினைத்த ஆசிரியர் நியமனத்தை கேட்டு உண்ணாவிரதம் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது எனவே நாடாளுமன்றத்தை கூட்டி இவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

இவர்கள் இடத்துக்கு பல்கலைக்கழக பட்டபடிப்பை முடித்து கூலி வேலை செய்துவரும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு நியமனங்களை ஜனாதிபதி வழங்க வேண்டும் என ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பல்கலைக்கழக படிப்பை பூர்த்தி செய்த எத்தனையே பட்டதாரிகள் கூலி வேலைக்கு செல்கின்றனர் அவர்கள் கூறுகின்றனர் இந்த வேலை வாய்ப்பை தங்களுக்கு கிடைத்தால் எந்த பிரச்சனையும் இன்றி இந்த நியமனத்தை ஏற்றுக் கொள்ள முடியும்.

எங்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டும் இவர்கள் நினைத்த வேலைவாய்ப்பை கோரி உண்ணாவிரதம் இருக்கின்றனர் என்கின்றனர்.

எனவே உண்ணா விரதம் இருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் தயவாக கேட்டுக் கொள்கிறோம் வேலையில்லா பட்டதாரிகள் என வீதிக்கு இறங்கி போராடிய போது உங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது எனவே வழங்கப்பட்ட இந்த தொழிலை ஏற்றுக் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு முடியுங்கள்.

இப்போது ஆசிரியர் நியமனத்தை கேட்டு உண்ணாவிரதம் இருக்கிறீர்கள் இன்று எத்தனையோ பட்டதாரிகள் அரச வேலையின்றி மேசன் மற்றும் கூலி தொழில்களுக்குச் செய்கின்றனர் அவர்களுக்கு அரசாங்க வேலை இல்லை உங்களுக்கு வேலை வழங்கியும் நீங்கள் நினைத்த வேலையை கேட்டு உண்ணாவிரதம் இருப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடையம்.

உங்களுக்கு ஆசிரியர் தொழில்தான் வேண்டுமாயின் அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிலுக்கு செல்லாமல் ஆசிரியர் நியமனம் கிடைக்கு மட்டும் நீங்கள் உங்கள் தொழில்களை கைவிடுங்கள்.

எனவே ஜனாதிபதியிடம் வேண்டிக் கொள்வது நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்ற காரணத்தால் இவ்வாறான தேவையற்ற ஆர்ப்பாட்டங்களை செய்து நாட்டை குழப்புவதை நீங்கள் பார்த்து கொண்டு இருக்காமல் பாராளுமன்ற பெரும்பான்மை உங்களிடம் இருப்பதால் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை எடுத்து இவர்களுக்கான ஒரு தீர்மானத்தை கொண்டு வாருங்கள்.

ஒன்று இவர்களுக்கு ஆசிரியர் நியமனம் கிடைக்கும் வரைக்கும் இவர்களுக்கு ஆசிரியர் நியமனம் தேவை என்றால் ஆசிரியர்களுக்கான வெற்றிடம் கிடைக்கும் வரைக்கும் இவர்களை பணி இடைநீக்கம் செய்து விட்டு வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை வழங்குங்கள் இவர்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கும் போது இவர்களுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்குங்கள்.

எனவே போதியளவு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் இந்த நாட்டை குழப்பி கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான தீர்மானத்தை எடுத்து இவர்களுடைய உண்ணாவிரத போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து வேலை இல்லா பட்டதாரிகளுக்கு அந்த நியமனங்களை வழங்கிவிட்டு ஆசிரியர் நியமன வெற்றிடங்கள் வரும் வரைக்கும் இவர்களை காத்திருக்குமாறு கூறி இந்த உண்ணாவிரத போராட்டத்தை முடிவக்கு கொண்டுவரும்படி ஜனாதிபதியிடம் தயவாக கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

முந்தைய செய்தி துணுக்காய் தென்னியன்குளத்தில் பிரமாண்ட பொங்கல் விழா
அடுத்த செய்தி அரியாலையில் குப்பைக்கு வைத்த தீயில் வயோதிப பெண் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வவுனியா நெளுக்குளத்தில் பண்பாட்டுப் பொங்கல் பெருவிழா.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் கிளின் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம்

மார்ச் 17, 2026
இலங்கைவிசேட செய்திகள்

யாழில். நால்வருக்கு சிக்கன்குனியா பாதிப்பு உறுதி…

ஏப்ரல் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மன்னாரிற்கு விஜயம்

மார்ச் 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?