இங்கிலாந்து திருச்சபையில் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்றைய தினம் (28) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன்படி இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற வரலாற்றை சாரா முல்லாலி படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
63 வயதான சாரா முல்லாலி, ஒரு புற்றுநோய் சிகிச்சை செவிலியராகப் பணியாற்றிப் பின்னர் மதகுருவாக மாறியவர்.
சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இவரது நியமனம், நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்ற சட்டபூர்வமான தேர்தல் உறுதிப்படுத்தல் நிகழ்வின் மூலம் நேற்று உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
