கனடாவில் இருந்து கியூபெக் மாகாணம் பிரிந்து தனிநாடாக உருவாவதற்கான பொது வாக்கெடுப்பு(Referendum) பிரச்சாரம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகப் பார்ட்டி கியூபெக்வா(PQ) கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமண்டன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் கியூபெக் நகரில் உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி, 1759-ல்நடந்த வரலாற்றுப் புகழ்பெற்ற பிளைன்ஸ் ஆஃப் ஆபிரகாம் போரை ஒருகூட்டுறவின் தொடக்கம் என்று வர்ணித்திருந்தார்.
பிரிட்டிஷார் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்த அந்தப் போரை, இரு இனத்தவருக்கும் இடையிலான ஒத்துழைப்பு என்று பிரதமர் குறிப்பிட்டது கியூபெக் பிரிவினைவாதிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி மாநாட்டில் பேசிய பிளாமண்டன்,பிரதமரின் பேச்சை விமர்சித்தார்.
பிரதமர் கார்னி வரலாற்றைத் தவறாகச் சித்திரிக்கிறார் என்று விமர்சித்த பார்ட்டி கியூபெக்வா கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமண்டன், அந்த போர் காலனித்துவத்தின் தொடக்கம் என்று குறிப்பிட்டார்.
கியூபெக் கனடாவினால் உயிர்வாழவில்லை என்றும் கனடாவின் தடைகளையும் மீறியே தனது அடையாளத்தைப் பாதுகாத்து வருகிறது என்றும் பிளாமண்டன் தெரிவித்தார்.
