மொன்ட்ரியல் நகரம் ஒருபுறம் கடும் பனிப்பொழிவாலும், மறுபுறம் தொடர் மின்வெட்டாலும் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
ஏற்கனவே உறைபனி குளிரால் மக்கள் தவித்து வரும் நிலையில், இன்று சுமார் 25 சென்டிமீட்டர் வரையிலான புதிய பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை ஹாம்ப்ஸ்டெட்(Hampstead) மின்
நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக,
மொன்ட்ரியலின் பல பகுதிகள் இருளில் மூழ்கின.
பெரும்பாலான இடங்களில் மின்சாரம் சீராகிவிட்டாலும், இன்னும் சுமார் 3,000 வீடுகள் மூன்றாவது நாளாக மின்சாரம் இன்றி உள்ளன.
அனைத்து வீடுகளுக்கும் ஒரே நேரத்தில் மின்சாரம் வழங்கினால் மின்சாரக் கட்டமைப்பு (Grid) தாங்காது என்பதால், ஒவ்வொரு வீடாக நிதானமாகவே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என ஹைட்ரோ-கியூபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்வெட்டு மற்றும் பனிப்பொழிவு காரணமாக கோட் செயின்ட் லூக் மற்றும் என்.டி.ஜி (NDG) பகுதிகளில் உள்ள பல பள்ளிகளுக்கு
இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மொன்ட்ரியல் ட்ரூடோ விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து
செய்யப்பட்டுள்ளன.
வீடுகளில் வெப்ப வசதி இல்லாதவர்களுக்காகக் கனேடிய செஞ்சிலுவைச்சங்கம் (Red Cross) கோட்-டெஸ்-நெய்ஜஸ் (Côte-des-Neiges) சமூகமையத்தில் அவசர தங்குமிடத்தைத் திறந்து வைத்துள்ளது.
முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத்
தீயணைப்பு வீரர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பனி உறைந்து குழாய்கள் வெடிப்பதைத் தவிர்க்க, வீடுகளில் ஒரு குழாயைத் திறந்து வைத்து சிறிதளவு தண்ணீரை ஓட விடுமாறு கியூபெக் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
