டொராண்டோ நகர சபையின் “சிக்ஸ்பிளெக்ஸ்” (Sixplex) கட்டிடக் கொள்கையில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, மத்திய அரசு வழங்கவிருந்த வீட்டுவசதி நிதியில் 10 மில்லியன் டொலர் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய வீட்டுவசதித் துறை அமைச்சர் கிரிகோர் ராபர்ட்சன் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
கனடா முழுவதும் நிலவும் வீட்டுவசதி தட்டுப்பாட்டைப் போக்க “Housing Accelerator Fund” திட்டத்தின் கீழ் டொராண்டோ நகர சபைக்கு 471 மில்லியன் டொலர் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதற்குப் பதிலாக, ஒரு நிலத்தில் 6 வீடுகள் வரை உள்ளடக்கிய சிக்ஸ்பிளெக்ஸ் கட்டிடங்களை, நகரம் முழுவதும் கட்ட அனுமதிக்க வேண்டும் என, மத்திய அரசு நிபந்தனை விதித்தது.
ஆனால், கடந்த ஜூன் மாதம் டொராண்டோ நகர சபை எடுத்த முடிவின்படி, டொராண்டோ நகரம் முழுவதும் இந்த அனுமதியை வழங்காமல், வெறும் 9 வார்டுகளில் மட்டுமே சிக்ஸ்பிளெக்ஸ் கட்ட அனுமதி அளித்தது.
இது ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று கூறி மத்திய அரசு, தற்போது வழங்கவிருந்த நிதியைக் குறைத்துள்ளது.


