டொராண்டோ மாநகரக் காவல்துறையில் 16 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் மூத்த அதிகாரி ஒருவர், திருட்டு மற்றும் நம்பிக்கைத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
டொராண்டோ காவல்துறையின் 52-வது பிரிவில் (52 Division) பணியாற்றி வந்த கான்ஸ்டபிள் கிறிஸ்டோபர் கிட்மேன் (Christopher Gidman) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த சொத்துக்கள் மற்றும் பணம் காணாமல் போனது தொடர்பாக நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில் இவர் மீது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பல்வேறு வழக்குகளில் சாட்சியாகப் பறிமுதல் செய்யப்பட்டு, பாதுகாப்பகத்தில் (Evidence Locker) வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த மின்னணு சாதனங்கள், நகைகள் மற்றும் பல ஆயிரம் டாலர் ரொக்கப் பணத்தை இவர் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட வழக்கமான தணிக்கையின் (Audit) போது, சாட்சிப் பொருட்களில் தட்டுப்பாடு இருப்பதை அதிகாரிகள் கவனித்தனர்.
இதைத் தொடர்ந்து டொராண்டோ காவல்துறையின் ‘புரொபஷனல் ஸ்டாண்டர்ட்ஸ் யூனிட்’ (Professional Standards Unit) நடத்திய தீவிர விசாரணையில் கிறிஸ்டோபர் கிட்மேன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
