நாட்டில் பல குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து வருகின்ற நிலையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த வனாதே சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது இவரிடம் T-56 ரக துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகள் ஆகியவை இருந்ததாக ஹோமாகம குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வனாதே சம்பத் பொரளையிலுள்ள ஒரு பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து அப்பெண்ணையும், மகனையும் காயப்படுத்திய வழக்கில் இவர் முக்கிய சந்தேகநபராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
