நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை அத்துமீறல் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களையும், அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன் பிடித்துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ள கடற்படையினர் , படகினை அங்கு தடுத்து வைத்துள்ளதுடன் , கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
