நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆதரவாக, ஜப்பானின் நோரிடேக் (Noritake Company Limited) நிறுவனம் 20 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது.
இதற்கான காசோலையை, Noritake Lanka Porcelain நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கென்ஜி ஒபாரா (Kenji Obara) அவர்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இன்று (18) பாராளுமன்ற வளாகத்தில் வைத்து கையளித்துள்ளார்.
இந்நிகழ்வில் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, Noritake Lanka Porcelain நிறுவனத்தின் பணிப்பாளரும் பொது முகாமையாளருமான சுஜாதா எகொடகெதர, உதவிப் பொது முகாமையாளர் கெப்டன் எம்.எம். அதுல ரோஹான் சேனாரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
