மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் இடம்பெற்ற நிலவெடிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி வத்தேகம கபரகல வீதி பின்னர் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருந்தபோதும் நேற்று முதல் (17) பெய்துவருகின்ற கடும் மழைகாரணமாக மீண்டும் இன்று (18) குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வத்தேகம – கபரகலை மற்றும் வத்தேகம ஊடாக – கோமரை, பம்பரல்லை, பெத்தேகமை போன்ற பிரதேசங்களுக்கான போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
மாற்று வழிப்பாதைகளை இப்போக்குவரத்திற்காக பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளை அறிவுறுத்துகின்றது.
இதேவேளை மலையகத்தின் பன்விலை ,கபரகலை, மாத்தளை ,மடவளை ,கோமரை மடுல்கலை போன்ற பிரதேசங்களில் அதிக மழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு பல இடங்களில் மண் சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது.
