கியூபெக் மாகாணத்தின் ஊழல் தடுப்புக் காவல்துறையானது, கியூபெக் லிபரல் கட்சிக்கு எதிரான முறைகேடு சார் குற்றச்சாட்டுகள் குறித்து, அதிகாரப்பூர்வமாக விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஊழல் தடுப்புக் காவல்துறை தனது விசாரணையின் நோக்கத்தை வெளிப்படையாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்தக் குற்றவியல் விசாரணை முக்கிய முறைகேடுகளின் அடிப்படையில் அமைந்திருப்பதாக அறியப்படுகிறது. வாக்குக்கு பணம் கொடுத்தல் மற்றும் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை முதலான இரண்டு முறைகேடுகள் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, சம்பந்தப்பட்ட நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, கிரிமினல் விசாரணை இரகசியமாக வைக்கப்படும் என்று, ஊழல் தடுப்புக் காவல்துறை தெரிவித்துள்ளது.
