மனித குலத்துக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதற்காக ஷேக் ஹசீனாவின் மகன் சஜிப் வாஜேத் ஜோய்க்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் ஷேக் ஹசீனா பிரதமராக பதவி வகித்தபோது அரசுக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது.
போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.மாணவர் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை சுட்டுக் கொல்ல ஷேக் ஹசீனா உத்தரவிட்டதாக குரல் பதிவொன்று வௌியானது
இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் மகன் சஜிப் வாஜேத் ஜோய்க்கு மனித குலத்துக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதற்காக பங்களாதேஷின் சிறப்பு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
