இந்திய பெருங்கடலில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வதிர்வானது 6.0 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்டுள்ளதுடன், இவ்விடத்தில் எவ்விதமான சேதமும் இடம்பெறவில்லை.
இந்திய பெருங்கடலில் நிகழ்ந்துள்ள இந்த அதிர்வு டெக்டோனிக் தட்டு எல்லைகளுக்கருகில் நடைபெறும் வழக்கமான அதிர்வு என பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இலங்கை மற்றும் இந்திய கடற்கரைகளை எவ்வித அபாயமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
