கியூபெக் லிபரல் கட்சி (QLP), தனது உறுப்பினரான சோனா லக்கோயன் ஒலிவரை உடனடியாக வெளியேற்றியுள்ளது.
கியூபெக் லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கான சமீபத்திய தேர்தலில் வாக்களிப்புக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய சட்டமன்றத்தின் நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணை நடத்தி வரும் நிலையிலேயே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வெளியேற்றம், லிபரல் தலைவர் பப்லோ ரோட்ரிக்ஸின் வேண்டுகோளின் பேரில் எடுக்கப்பட்டது என்றும், இது “தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட அவசியமான முடிவு” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சோனா லக்கோயன் ஒலிவர் தம் மீது “குற்றம் சாட்ட எதுவும் இல்லை” என்று வலியுறுத்தியுள்ளதுடன், விசாரணைக்கு தாம் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
