மொண்ட்ரியல் நகர மேயராகப் பதவியேற்றுள்ள சோராயா மார்டினெஸ் ஃபெராடா (Soraya Martinez Ferrada), நகரில் அதிகரித்து வரும் வீடற்றோர் நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், குளிர்காலத்திற்கான அவசரகாலத் திட்டத்தை இன்று அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ், கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் 500 புதிய தங்குமிடங்கள் (Warming Shelters) திறக்கப்படும் என்றும், தெருக்களில் இருக்கும் மக்களுக்கு உதவி வழங்க ஒரு புதிய நெருக்கடி தீர்க்கும் குழு (Crisis Unit) அமைக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். வீடற்ற மக்கள் நெருக்கடியானது மொண்ட்ரியலில் முன்னெப்போதையும் விட மோசமாக இருப்பதாகக் குறிப்பிட்ட மேயர் சோராயா மார்டினெஸ் ஃபெராடா, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தனது நிர்வாகத்தின் முதன்மையான முன்னுரிமை என்றும் தெரிவித்தார்.
வீடற்ற மக்களின் கௌரவத்தை மதித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்குவதே தனது நிர்வாகத்தின் கொள்கை என்று மேயர் வலியுறுத்தினார்.
