இந்த ஆண்டின் தொடக்கத்தில் கியூபெக்கின் மொன்ட்-ட்ரேம்ப்ளான்ட் (Mont-Tremblant) சுற்றுலாத் தலத்தில் மர்மமான சூழ்நிலையில் காணாமல் போனவர் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை $50,000 டொலராக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவைச் சேர்ந்த 22 வயதான லியாம் டோமன் (Liam Toman) என்பவரே, மொன்ட்-ட்ரேம்ப்ளான்ட் (Mont-Tremblant) சுற்றுலாத் தலத்திலிருந்து காணாமல் போயிருந்தார். லியாம் டோமன் கடைசியாகப் பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2 ஆம் திகதி வரையிலான இரவில், அதிகாலை 3:20 மணியளவில் தனது ஹோட்டலை
நோக்கி நடந்து செல்லும் பாதுகாப்பு கேமராவில் பதிவானார்.
ஆனால், அவர் மீண்டும் அந்த ஹோட்டலுக்குள் செல்லும் காட்சிகள் எவையும் பதிவாகவில்லை. இவர் குறித்த தகவல்களை வழங்குவோருக்கான அதிகரித்த பரிசுத் தொகை குறித்து, கியூபெக் மாகாணப் பொலிஸார் (SQ) அறிவித்துள்ளனர். இந்த பரிசுத் தொகை உயர்வு, பல மாதங்களாக நீடித்து வரும் இந்த மர்மமான காணாமல் போதல் வழக்கில் புதிய தடயங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
