இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமத்தில், 15 வயதுச் சிறுமியை அவரது பெற்றோர் ‘ஆணவக் கொலை’ செய்த கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 5ம் திகதி இந்தச் சிறுமி கொல்லப்பட்ட நிலையில்,இன்று காவல்துறையினர் பெற்றோரைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளதுடன், ஆரம்பத்தில் காவல்துறையைத் திசைதிருப்ப முயன்ற சிறுமியின் பெற்றோர், பின்னர் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
”தனது எதிர்ப்பையும் மீறி மகள் பல இளைஞர்களுடன் பழகியதால் ஆத்திரமடைந்ததாகத் தெரிவித்த அவர், கடந்த 5 ஆம் திகதி இரவு, மகளுக்கு சில மாத்திரைகளை கொடுத்து மயக்கமடைந்த மகளை வீட்டிலிருந்து சிறிது தூரம் இருவரும் எடுத்துச் சென்று அவளை கொலை செய்ததாக” மேலதிக விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
கிராமத்திலுள்ள இளைஞர்களுடன் தனது மகள் நட்பு கொண்டிருந்ததை எதிர்த்தே இந்த கொலைச் சம்பவம் நடந்ததுள்ளதுடன் இது ஒரு ”ஆணவக் கொலை” எனக் காவல்துறை உறுதிசெய்துள்ளதோடு, கைது செய்யப்பட்ட பெற்றோரிடம் நீதிமன்ற உத்தரவுபடி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
