கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட சந்தேகநபர்கள் நால்வரை 72 மணித்தியாலங்கள் தடுப்பு காவலில் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவை பெற கொழும்பு குற்றப்பிரிவு இன்று காலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இஷாரா செவ்வந்தியுடன் J K பாய், சுரேஷ் மற்றும் தக்ஷி ஆகியோருக்கும் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
