அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை மீது விதித்துள்ள புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினால் வரி நிர்ணயம் செய்யப்படவுள்ள ஏப்ரல் 9ஆம் திகதிக்கு முன்னர் வரியை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கத் தரப்பு கலந்துரையாடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவில் நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டு சபையின் தலைவர், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர், வெளியுறவு அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, இலங்கை வர்த்தக சபையின் பிரதான பொருளாதார கொள்கை ஆலோசகர் ஷிரான் பெர்னாண்டோ, அஷ்ரப் ஒமர், ஷெராட் அமலீன் மற்றும் சைப் ஜெபர்ஜி ஆகியோர் இந்த விசேட குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.