காட்டு யானையின் தாக்குதலில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பக்கமுன, பட்டுஹேன கிராத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
பொலன்னறுவை – பக்கமுன, பட்டுஹேனவில் கட(08) இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பட்டுஹேன கிராமத்துக்குள் காட்டு யானை ஒன்று திடீரென நுழைந்து வீடுகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.
பயிர்களை சேதப்படுத்தியது மட்டுமன்றி நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரையும் யானை தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான நான்கு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
க கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கிராம மக்கள் அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
