Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

போதை பொருளுடன் கைதான இளம் தம்பதிகள்

அக்டோபர் 7, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வைத்த 2030 கிராம் ஜஸ் போதை பொருளுடன் 24,23 வயதுடைய இளம் தம்பதிகள் ஆகிய இருவரை நேற்று திங்கட்கிழமை (6) மாலையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜறூஸ் தலைமையிலாக பொலிசார் கைது செய்து ஒப்படைத்துள்ளதாகவும், கிழக்கு மாகாணத்தில் ஆகக்கூடிய தொகையிலான ஜஸ் போதை பொருள் இப்போது முதல் முறையாக கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜறூஸ் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று மாலை 4.30 மணியளவில் உதவி பொலிஸ் அத்தியட்சக் கரியாலயத்துக்க அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கல்குடாவில் இருந்து ஜஸ் போதை பொருளை முச்சக்கர வண்டியில் எடுத்தக் கொண்டு சென்ற போது அவர்களை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து 2030 கிராம் ஜஸ் போதை பொருளை கைப்பற்றியதையடுத்த வெர்களை கைது செய்ததுடன் முச்சக்கரவண்டி ஒன்றையும் மீட்டனர்.

மொறக்கொட்டான் சேனையில் இருக்கும் ஒரு பிரதான போதை பொருள் வியாபாரி குறித்த தம்பதிகளிடம் கொழும்பில் நாய்குட்டி ஒன்று வாங்கி இருப்பதாகவும் அதனை எடுத்து கொண்டுவந்து தருமாறும் அதற்கு கூலியாக 30 ஆயிரம் ரூபா பணம் தருவதாக தெரிவித்து முற்பணமாக 15 ஆயிரம் ரூபாவை வழங்கியியுள்ளார்.

இதனையடுத்து குறித்த தம்பதிகள் கொழும்புக்கு புகையிரதத்தில் சென்று அங்கு புறக்கோட்டை பகுதியில் வைத்து குறித்த தம்பதிகளிடம் பெண் ஒருவர் நாய்குட்டி ஒன்றையும் ஒரு பையையும் வழங்கியதையடுத்து அவர்கள்பேருந்து ஒன்றில் கல்குடாவில் உள்ள அவர்களது வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

இதையடுத்து சம்பவதினமான நேற்று மாலை மொறக்கொட்டாஞ் சேனையில் உள்ள போதை வியாபரியிடம் தாங்கள் கொழும்பில் இருந்து வாங்கி கொண்டுவந்த நாய்க்குட்டி மற்றும் பையை கொண்டு சென்று கொடுப்பதற்காக முச்சக்கரவண்டியில் பிரயாணித்துக் கொண்டிருந்தபோது பொலிசார் கைது செய்துள்ளதாகவும், தாங்கள் குறித்த பையை திறந்து பார்க்கவில்லை எனவும் இதில் போதை பொருள் இருப்பது தங்களுக்கு தெரியாது என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இளம் தம்பதிகளை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி சுதுமலை அம்மன் ஆலயம் தொடர்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு
அடுத்த செய்தி 20 தமிழ் சிங்கள தம்பதியினருக்கு திருமணம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இன்றைய நாளுக்கான தங்க நிலவரம்!

மே 31, 2025
இலங்கை

கெஹெல்பத்தர பத்மேவின் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன!

செப்டம்பர் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரவூர்தி விபத்து – இருவர் காயம்

பிப்ரவரி 27, 2026
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

மே 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?