இரண்டு புதிய மாதுளை வகைகளை விவசாயத் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் செய்யப்பட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
‘மலி பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ எனப் பெயரிடப்பட்ட இந்த மாதுளை வகைகள், அம்பலாந்தோட்டை ருஹுணு தாவர நர்சரியின் கீழ் சோதிக்கப்பட்டன.
இந்த மாதுளை வகைகளை ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பயிரிட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு புதிய மாதுளை வகைகளையும் நாட்டில் பயிரிடுவால், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மாதுளைகளின் அளவைக் குறைக்க முடியும் என கூறப்படுகின்றது.
அத்துடன் இந்த மாதுளைகளை வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்புவதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்டும் திறன் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
