நடப்பாண்டில் இதுவரை வாகன விபத்துக்களில் 1,960 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 1 முதல் செப்டம்பர் 17 வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில், 1,843 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதுடன் இதுவரையில் 3,708 பாரதூரமான விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
