உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க 7ஆவது இடத்தைப் பிடித்தார்.
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள் ஈட்டி எறிதலில் இலங்கை தடகள வீரர் ருமேஷ் தரங்க 84.38 மீற்றர் தூரம் எறிந்து 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கையின் முதல் ஆண் தடகள வீரர் இவர் என கூறப்படுகிறது.
இதேவேளை இந்தப் போட்டியில் தங்கப் பதக்கத்தை டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த கேஷோ வால்காட் வென்றார்.
