கியூபெக் மாகாண அரசின் கல்விக்கான நிதி குறைப்புகளுக்கு எதிராக, பெற்றோர், மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மொன்றியலில் உள்ள மாகாண கல்வி அமைச்சக அலுவலகம் முன்பாக இந்த போராட்டம் நிகழ்ந்துள்ளது.
அரசின் நிதி குறைப்புகளுக்கு எதிர்த்து, போராட்டக்காரர்கள் முழக்கங்கள் எழுப்பியும், மேளங்கள், ஹார்ன்கள் மற்றும் பிற இசைக்கருவிகளை முழங்கியும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்றும், கல்வி நிதியை ஒரு ‘செலவினமாக’ மட்டும் பார்க்கும் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
கல்வி நிதிக் குறைப்பு, மாணவர்களுக்குக் கிடைக்கும் சேவைகளைக் குறைத்து, சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
