டொராண்டோவில் உள்ள பார்க்சைட் டிரைவ் சாலையில் பொருத்தப்பட்டிருந்த வேகக் கட்டுப்பாட்டு கருவி (speed camera) கடந்த 10 மாதங்களில் 7வது முறையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கருவி கீழே சேதப்படுத்தப்பட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் வீதிப் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதத்தில், இந்த கருவிக்கு அருகில் பாதுகாப்பு கேமரா ஒன்று பொருத்தப்பட்டது.
எனினும், அந்த கேமரா பொருத்தப்பட்ட ஒரு வாரத்திற்குள், மீண்டும் இந்தக் கருவி சேதப்படுத்தப்பட்டது.
டொராண்டோ காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


