கெஹெல்பத்தர பத்மேவினால் வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நுவரெலியாவில் உள்ள ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளுக்கு அமைய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எமது செய்தி சேவைக்கு தெரவித்தார்.
அதன்படி, தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமையவே மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்திக்கான மூலப்பொருள் மற்றும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தற்போது தடுப்பு காவிலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்டோரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதற்கமைய, நுவரெலியாவில் உள்ளதாக கூறப்படும் ஐஸ் போதைப் பொருள் தொழிற்சாலை குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதற்கமைய, அங்கும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எமது செய்தி சேவைக்கு தெரவித்தார்.
