நிலவும் மோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
இந்த நாட்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால் நாளை (20) நடைபெறவுள்ள பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.