வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்ளத்தின் அனுசரணையுடன் கண்டாவளை பிரதேச செயலக மகளீர் அபிருத்தி நிலையத்தின் மனைப்பொருளியல் கண்காட்சி விசுவமடு மத்தி சனசமூக நிலையத்தில் இன்று நடைபெற்றது.
மனைப்பொருளியல் பயிற்சி பெறுபவர்களின் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
கண்டாவளை பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கண்டாவளை பிரதேச செயலகத்தின் கணக்காளர் பி.கார்த்திகா கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக கிராம அபிவிருத்தி திணைக்ளத்தின் நிர்வாக உத்தியோகத்தர் சி.சுமதி ,மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.உமாபாலன்,பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் P.அமலராசா, திருமதி. பி.சுரேகா நிர்வாக உத்தியோகத்தர், கிராம அலுவலகர் என பலரும் கலந்து கொண்டனர்.