கிளிநொச்சி மகிழங்காடு கமக்காரர் அமைப்பின் நெற்களஞ்சிய சாலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடமாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் மருங்கன் மோகன், விவசாயிகள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
குறித்த நெல் கொள்வனவு தொடர்பாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில் முன்னைய காலங்களில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய வேண்டுமாயின் போராட்டங்கள் நடத்தப்பட்டு அறுவடை முடிந்து பல மாதங்களின் பின்னரே குறித்த சில விவசாயிகளிடம் மாத்திரமே நெல் கொள்வனவு இடம்பெற்று வந்தது.
தற்போதைய அரசாங்கம் அறுவடை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நெல் கொள்வனவையும் ஆரம்பித்துள்ளது. அது மட்டும் இன்றி நெல்லுக்கான உத்தரவாத விலையினையும் வழங்கி உள்ளதுடன், தனியார் ஒரு மூட்டை நெல்லினை 5500,620 ரூபாய்க்கும் தற்பொழுது இடைத்தரர்களால் கொள்வனவு செய்யப்படுகின்றது.
இருப்பினும் அரசாங்கம் கூறியவாறு விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் ஒரு மூட்டை நெல்லினை 8450 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படுகிறது. குறித்த நெல் கொள்வனவு தொடர்ச்சியாக அனைத்து விவசாயிகளிடம் கொள்வனவு செய்யப்பட வேண்டும் எனவும் குறித்த சம்பவம் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் உரிய நேரத்தில் நெல் கொள்வனவில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
