இலங்கையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இன்று மார்ச் 21 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய விலை திருத்தத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, ஆட்டோ டீசல் லீட்டருக்கு 79 ரூபாய் அதிகரித்து, 382 ரூபாயாக உயர்ந்துள்ளது. சூப்பர் டீசல் 90 ரூபாய் உயர்ந்து, 443 ரூபாயாகியுள்ளது. அதேபோல், 92 ஒக்டேன் பெட்ரோல் 81 ரூபாய் அதிகரித்து, 398 ரூபாயாகவும், 95 ஒக்டேன் பெட்ரோல் 90 ரூபாய் உயர்ந்து, 455 ரூபாயாகவும் விற்கப்படும். மேலும், மண்ணெண்ணெய் லீட்டருக்கு 60 ரூபாய் அதிகரித்து, 255 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு நாடு முழுவதும் போக்குவரத்து செலவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
